சிக்கிம் மாநிலத்தில் திடீர் வெள்ளம்
By: vaithegi Thu, 05 Oct 2023 1:43:32 PM
சிக்கிம் : திடீரென்று ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக 40 பேர் உயிரிழ ... சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை நேரத்தில் லோநாக் ஏரி பகுதியில் திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு மணிக் கணக்கில் கனமழை பெய்ய தொடங்கியது. கனமழையின் காரணமாக லாசென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே இதன் காரணமாக சுங்தாங் அணையின் நீர்வரத்து உயரத் தொடங்கியது. அணையி லிருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டதால் 15, 20 அடி உயரத்துக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கரையோரங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டு பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மாநிலத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது.