பயணிகளை ஏற்றாமல் சென்ற விமானம்... நடவடிக்கைக்கு உத்தரவு
By: Nagaraj Tue, 10 Jan 2023 10:51:57 PM
பெங்களூர்: 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாமல் புறப்பட்ட விமானம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு ‘கோ ஃபர்ஸ்ட்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. ஆனால் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாமல் விமானம் புறப்பட்டது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ‘கோ ஃபர்ஸ்ட்’ விமான
நிறுவனத்திடம் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை
கேட்டுள்ளது.இதற்கான காரணங்களை கண்டறிய உத்தரவிட்டது.
இந்நிலையில், ‘கோ ஃபர்ஸ்ட்’ விமான நிறுவனம், பயணிகளை ஏற்றிச் செல்லாமல் விமானம் புறப்பட்ட விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும், அந்த விமானத்தில் பணியாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்து விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.