Advertisement

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By: vaithegi Thu, 09 Nov 2023 3:29:37 PM

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை : வைகை கரையோர மக்களே உஷார் ...தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. எனவே இதன் காரணமாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பொழிந்து கொண்ட வருகிறது.

எனவே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி தற்போது வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. கடந்த 2 நாட்களாக வைகை கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தது.

vaigai,flood warning ,வைகை , வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இதையடுத்து நீர்மட்டம் முழு கொள்ளளவு எட்டி இருப்பதால் நாளை முதல் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகைக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
|