கொட்டும் மழையால் மீண்டும் வெள்ளம்... மக்கள் அச்சம்
By: Nagaraj Tue, 18 Oct 2022 10:07:17 PM
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வீடுகள், விளைநிலங்கள், நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதியான முர்ரேயின் நீர்மட்டம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த நதி நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவின் அதிக மக்கள்தொகை
கொண்ட மாநிலங்களில் பாய்கிறது. மெல்போர்னில் இருந்து 200 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள மோமாவில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
வெளியேற்றப்பட்ட
குடிமக்களுக்கு தங்குமிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் காரணமாக
பால் உற்பத்தி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.