Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்சியை விரிவுபடுத்தி நல்லுறவை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்

கட்சியை விரிவுபடுத்தி நல்லுறவை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்

By: Nagaraj Tue, 24 Jan 2023 10:40:46 PM

கட்சியை விரிவுபடுத்தி நல்லுறவை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றி பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, 2024 பொதுத் தேர்தலில் கட்சியை விரிவுபடுத்தி, எண்ணிக்கையை அதிகரித்து, நல்லுறவை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கட்சி அனைத்து சமூகத்தினரையும் சென்றடைய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், குறிப்பிட்ட சமூகத்தினர் நமக்கு வாக்களிக்காவிட்டாலும் அவர்களை அணுகி நமது கொள்கைகளை விளக்க வேண்டும் என கூறினார்.

bjp,muslim member,new delhi, ,பாஜக, புதுடெல்லி, முஸ்லிம் உறுப்பினர்

இதையடுத்து, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், 60 நாடாளுமன்ற தொகுதிகளை கண்டறிந்து, முஸ்லிம் உறுப்பினர்களை அதிகளவில் கட்சியில் சேர்க்க, நடவடிக்கை எடுக்க, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு திட்டமிட்டுள்ளது.

மேலும், பாஜக வின் சிறுபான்மை பிரிவு சார்பில் தேசிய செயற்குழு கூட்டம் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், முஸ்லிம் சமூகத்தினருக்காக மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடையும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்.

Tags :
|