Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By: Monisha Mon, 12 Oct 2020 5:51:39 PM

உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்து வருவதால் உணவுப்பொருள் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

edappadi palanisamy,northeast monsoon,storm,damage,action ,எடப்பாடி பழனிசாமி,வடகிழக்கு பருவமழை,புயல்,பாதிப்பு,நடவடிக்கை

புயல் வீசும்போது மரங்கள் கீழே விழுந்தால் அவற்றை அகற்ற உபகரணங்கள் தயாராக உள்ளன. புயல் காலத்தில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் 90% தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|