Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கம்பம் மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு-கெட்டுப்போன மீன்கள் பினாயில் ஊற்றி அழிப்பு..

கம்பம் மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு-கெட்டுப்போன மீன்கள் பினாயில் ஊற்றி அழிப்பு..

By: Monisha Tue, 19 July 2022 8:20:49 PM

கம்பம் மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு-கெட்டுப்போன மீன்கள் பினாயில் ஊற்றி அழிப்பு..

தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் உள்ள ஓடைக்கரைத் தெரு, வ.உ.சி திடல் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயணம் தடவிய மீன்கள் மற்றும் கெட்டுப் போன மீன்கள் விற்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மணிமாறன், மதன்குமார், சுரேஷ் கண்ணன் மற்றும் வைகை அணை மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் கம்பம் பகுதியில் உள்ள மீன், இறைச்சிக் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

மீன் கடைகளில் கெட்டுபோன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? ரசாயனம் தடவிய மீன்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

fish,market,destroyed,spoil , மீன், கடை, உணவு,ஆய்வு,

இந்த ஆய்வில் கம்பம் பகுதியில் உள்ள பல மீன் கடைகளில் ஏழு நாட்கள் வரை பழமையான கெட்டுப்போன மீன்களைப் பதப்படுத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனைக்காக கடைகளில் வைத்திருந்த கெட்டுப்போன 25 கிலோ வரையிலான மீன்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கெட்டுப்போன மீன்கள் மீது பினாயில் ஊற்றி அளித்தனர்.

அதனை தொடர்ந்து மீன் வியாபாரிகளிடம் உடல் நலத்திற்கு தீங்கும் விளைவிக்கும் வகையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags :
|
|