Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 2 நாட்கள் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

இன்று முதல் 2 நாட்கள் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

By: vaithegi Sat, 02 Sept 2023 1:29:29 PM

இன்று முதல் 2 நாட்கள் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பழவேற்காடு : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிந்து இன்று பகல் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் ஏவ இருக்கிறது.

இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. 100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

fishermen,phalaverkadu ,மீனவர்கள் ,பழவேற்காடு


ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது. சரியாக முற்பகல் 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது.

இந்நிலையில், ஆதித்யா எல்.1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளதை முன்னிட்டு பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 2 நாட்கள் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags :