Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுமக்களின் கவனத்திற்கு ... அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை ஏற்படாது

பொதுமக்களின் கவனத்திற்கு ... அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை ஏற்படாது

By: vaithegi Sat, 30 Sept 2023 3:10:33 PM

பொதுமக்களின் கவனத்திற்கு ... அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை ஏற்படாது


சென்னை: வாராந்திர விடுமுறை மற்றும் அரசு விடுமுறை அடுத்தடுத்து வரவுள்ளதால் 2 நாட்களுக்கு மின்தடை ஏற்படாது ... தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி ஒவ்வொரு பகுதியாக இப்பணிகள் நடைபெற்று வருவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருவி குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இது பற்றி மின் பயனர்களுக்கு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.

power outage,maintenance works ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

மேலும் அது மட்டுமில்லாமல் செயற்பொறியாளர்கள் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை( அக்.01)வாராந்திர விடுமுறை மற்றும் திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி(அக்.02) ஆகிய 2 விடுமுறை நாட்களை முன்னிட்டு மின் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாது.

இதனால் மின் விநியோகமானது தடை செய்யப்படமாட்டாது. அதனால் மின் பயனர்கள் கவலையின்றி உங்களது வேலைகளை வழக்கம் போன்று மேற்கொள்ளலாம்.

Tags :