ஐந்தாம் முறையாக சென்னையில் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
By: Nagaraj Tue, 19 May 2020 10:15:05 AM
வரும் 31ம் தேதி வரை சென்னையில் ஐந்தாம் முறையாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பெருநகர காவல் ஆணையா் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் கடந்த மாா்ச் 24ம் தேதி முதல் முறையாக 144 தடை உத்தரவை, சென்னை காவல் ஆணையா் விசுவநாதன் பிறப்பித்தாா். தொடர்ந்து ஏப்ரல் 14-ஆம் தேதி இரண்டாவது முறையாக இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் குழும தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.