Advertisement

முதன்முறையாக பத்து மாத குழந்தைக்கு ரயில்வேயில் பணி

By: Nagaraj Wed, 13 July 2022 4:13:29 PM

முதன்முறையாக பத்து மாத குழந்தைக்கு ரயில்வேயில் பணி

சட்டீஸ்கர்: பத்து மாத குழந்தைக்கு வேலை... ரயில்வே ஊழியராக பணியாற்றி தந்தை மற்றும் தாய் இருவரும் ஒரு விபத்தில் இறந்ததால் 10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை போட்டு தரப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் என்பவர் விலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.

ten months,child,railway work,officers,father,accident ,பத்துமாதம், குழந்தை, ரயில்வே பணி, அதிகாரிகள், தந்தை, விபத்து

ஆகவே ரயில்வே விதிகளின் படி, ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது.

சிறிய குழந்தை என்பதால், அதன் கைரேகையை பதிவு செய்து பணி உறுதிபடுத்தப்பட்டது, குழந்தைக்கு 18 வயதை பூர்த்திசெய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 10 மாத குழந்தைக்கு அரசு வேலை வழங்கியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|