சென்னையில் முதல்முறையாக நேற்று அதிகபட்ச மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது
By: vaithegi Fri, 09 June 2023 11:21:25 AM
சென்னை: நேற்று அதிகபட்சமாக 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி கொண்டு வருகிறது. பகல் நேரங்களில் வெப்பக்காற்றும், இரவு நேரங்களில் புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து கொண்டு வருகிறது.
இதையடுத்து சீரான மின் விநியோகம் வழங்க மின்சார வாரியம் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த வெயில் காரணமாக ஏசி, குளிர்சாதன பெட்டி போன்றவற்றின் பயன்பாடு உயர்ந்துள்ளதால் மின்தேவையும் உயர்ந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் மின்சார பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
அந்தவகையில் சென்னையில் நேற்று முதன்முறையாக அதிகட்ச மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“முதன்முறையாக சென்னையில் நேற்று (08/06/2023) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 02/06/2023 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எந்த வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.