Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபாடு

சென்னையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபாடு

By: vaithegi Fri, 17 Nov 2023 10:16:17 AM

சென்னையில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபாடு

சென்னை: 2வது நாளாக சோதனை ...சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தியாகராய நகர், கோபாலபுரம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதனை அடுத்து வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு,

மேலும் அவரது நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. கோபாலபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் ஐ.டி.சோதனை நடைபெற்றது.

officers,income tax department,exam ,அதிகாரிகள் ,வருமான வரித்துறை ,சோதனை


இந்த நிலையில், சென்னையில் 2- வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் ஜவுளிக் கடை உரிமையாளர் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது ,

தியாகராய நகர், கோபாலபுரத்தில் பைனான்சியர்கள் வினோத் கிருஷ்ணா, பிரகாஷ் வீடுகளில் சோதனை நடந்து கொண்டு வருகிறது. வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது.

Tags :