வெளிநாட்டு பொருட்களுக்கு டாட்டா... இனி உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை
By: Nagaraj Wed, 13 May 2020 11:21:34 PM
இனிமேல் இல்லை வெளிநாட்டு பொருட்கள் என்று "கேட்" லாக் செய்ய போகிறது மத்திய ஆயுத போலீஸ் படை கேன்டீன்கள்.
நாடு முழுவதும் உள்ள மத்திய ஆயுத போலீஸ் படை கேன்டீன்கள் மற்றும் ஸ்டோர்களில் ஜூன் 1 முதல் உள்நாட்டு பொருட்கள்
மட்டுமே விற்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய படை கேன்டீன்கள் 2,800 கோடிக்கு பொருட்களை வாங்குகின்றன. இதன்மூலம், படைவீரர்களின் குடும்பங்களில் உள்ள 50 லட்சம் பேர் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த துவங்கினால், இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியா தன்னிறைவு நாடாக மாறும் என்றும் அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரத்தை மீட்க இந்திய பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி
கேட்டுக்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.