Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்கள் அமைப்பு

விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்கள் அமைப்பு

By: vaithegi Tue, 23 Aug 2022 05:01:17 AM

விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்கள்  அமைப்பு

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ஆராய கடந்த மாதம் 18-ந் தேதி மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இந்த குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதனை அடுத்து இந்தநிலையில், இந்த குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடைபெற்றது. 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுக்கு 3 உறுப்பினர்கள் பொறுப்பு ஒதுக்கப்பட்ட போதிலும், உறுப்பினர்களை நியமிக்காத மோர்ச்சா, இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

farmers,sub-groups , விவசாயிகள்,துணை குழுக்கள்

இதை தொடர்ந்து நாள் முழுவதும் நடந்த ஆலோசனை கூட்டத்தில், விவசாயிகளின் 3 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய 4 துணை குழுக்களை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் பல்வகை பயிர்களை பயிரிடுவது, பயிரிடும் முறையில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் வெளிப்படையாக ஆக்குவது போன்றயவை குறித்து முதல் துணை குழு ஆய்வு செய்யும். 2-வது குழு, நுண்நீர் பாசனம் பற்றியும், 3-வது குழு இயற்கை விவசாயம் பற்றியும், 4-வது குழு பல்வகை பயிர்களை பயிரிடுவது பற்றியும் ஆய்வு செய்யும்.

Tags :