இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் மரணம்
By: Nagaraj Tue, 13 Oct 2020 1:59:33 PM
முன்னாள் கேப்டன் மரணம்... இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் சாப்மன், மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் கார்ல்டன் சாப்மன் 49. கடந்த 1995-2001ல் இந்திய அணிக்காக விளையாடினார். 1997ல் இவரது தலைமையிலான இந்திய அணி தெற்காசிய கால்பந்து தொடரில் கோப்பை வென்றது.
கிளப் கால்பந்து அரங்கில் ஈஸ்ட் பெங்கால், ஜே.சி.டி., மற்றும் கொச்சி
அணிகளுக்காக விளையாடினார். முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா,
எம்.விஜயன் மற்றும் சாப்மன் இணைந்த கூட்டணியை கிளப் கால்பந்து அரங்கில்
'டெட்லி டிரையோ' என்றழைப்பர்.
பெங்களூருவில் தங்கியிருந்த இவருக்கு
திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அகில இந்திய கால்பந்து சங்கம் மற்றும் மும்பை, கேரளா உள்ளிட்ட பல்வேறு அணிகள் இரங்கல் தெரிவித்தன.