முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்கள் முடக்கம்
By: Nagaraj Mon, 15 May 2023 7:45:46 PM
ஆந்திரா: முன்னாள் முதல்வர் சொத்துக்கள் முடக்கம்... ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்துகளை முடக்கி ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள சந்திரபாபு வீடும், முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும், அமராவதியில் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் விருந்தினர் மாளிகை மற்றும் முன்னாள் அமைச்சர் நாராயணாவுக்கு சொந்தமான 22 அசையா சொத்துகளை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் ஆந்திர அரசு சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு மற்றும் நாராயணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.