Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுக்கடை முன்பு மாடுகளை கட்டி வைத்து முன்னாள் முதல்வர் நூதன போராட்டம்

மதுக்கடை முன்பு மாடுகளை கட்டி வைத்து முன்னாள் முதல்வர் நூதன போராட்டம்

By: Nagaraj Sat, 04 Feb 2023 7:19:33 PM

மதுக்கடை முன்பு மாடுகளை கட்டி வைத்து முன்னாள் முதல்வர் நூதன போராட்டம்

போபால்: நிவாரி மாவட்டத்தில் உள்ள ஆர்ச்சா நகரில் மதுக்கடை முன்பு மாடுகளை கட்டி வைத்து போராட்டத்தில் முன்னாள் முதல்வர் உமாபாரதி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் மதுவை கைவிட்டு பால் குடியுங்கள் என்ற கோஷத்தை எழுப்பினார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போபால் அயோத்தி நகர் பகுதியில் உள்ள ஹனுமான் மற்றும் துர்க்கை கோவிலுக்கு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான உமாபாரதி சென்றுள்ளார். கோவில் முன்புறம் மதுக்கடை உள்ளது.

இதுபற்றி உமா பாரதி கூறும்போது, கோவிலுக்கு எதிரே மதுக்கடை, பார் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார். ஜனவரி 31-ம் தேதிக்குள் புதிய மதுக் கொள்கை அறிவிக்கப்படும் என்று முதல்வர் என்னிடம் கூறினார்.

அந்தக் கொள்கைக்காக என்னால் காத்திருக்க முடியாது. பார்களில் கோசாலைகளை ஆரம்பிக்க உள்ளேன். தேர்தலில் வெற்றி பெறுவது பெரிய விஷயமல்ல. மக்களுக்கு சேவை செய்து அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதே இதன் நோக்கம் என்றார். இந்நிலையில், நிவாரி மாவட்டத்தில் உள்ள ஆர்ச்சா நகரில் உள்ள மதுக்கடை முன்பு மாடுகளை கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் மதுவை கைவிட்டு பால் குடியுங்கள் என்ற கோஷத்தை எழுப்பினார்.

bjp,govt,liquor,pal,uma bharati, ,அரசு, உமா பாரதி, பா.ஜ.க, பால், மது

கடந்த காலங்களில் உமாபாரதி மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் போபாலில் உள்ள மதுக்கடை மீது கல் வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது, பசுக்களை கட்டிய அதே மதுக்கடையில் கடந்த ஆண்டு ஜூனில் பசுஞ்சாணம் கொண்டு வந்து வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதனால், அவர் வருவது அறிந்ததும், மதுபான கடைக்காரர் கடையின் ஷட்டரை மூடி விட்டார். போன தடவை போன்று இந்த தடவையும் எதனையாவது தூக்கி வீசி விட போகிறார் என்ற பயம் ஏற்பட்டு விட்டது என கடையின் விற்பனையாளர் ராம்பால் கூறியுள்ளார்.

இந்நிலையில் மக்களின் குடிப்பழக்கத்திற்கு தானும் பொறுப்பு என உமாபாரதி தெரிவித்துள்ளார். 2003ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டேன். அதனால்தான், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது என்றார். இடையில் காங்கிரஸ் கட்சி 2018-2020 வரை 15 மாதங்கள் ஆட்சி செய்தது. மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

Tags :
|
|
|
|