Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் அதிபரானார்

முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் அதிபரானார்

By: Nagaraj Mon, 13 Feb 2023 11:44:55 PM

முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் அதிபரானார்

நிக்கோசியா: புதிய அதிபர்... சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4.05 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர்.

72.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில், 49 வயதான முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் 51.9 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

நேற்று நடந்த சைப்ரஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ், இரண்டாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ்-ஐ தோற்கடித்து 51.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் DISY கட்சியின் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், 2013 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார், 2018 இல் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

chancellor,turkish forces,occupation,support ,அதிபர், துருக்கிய படைகள், ஆக்கிரமிப்பு, ஆதரவு

சட்டப்படி, அவர் மூன்றாவது முறையாக பதவியேற்க முடியாது. அதன்பிறகு தற்போது நடந்த அதிபர் தேர்தலில் 49 வயதான கிறிஸ்டோடவுலைட்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோடவுலைட்ஸ் 2022 ஆம் ஆண்டு வரை சைப்ரஸின் வெளியுறவு அமைச்சராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 66 வயதான ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிஸ் 48.1 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

சைப்ரஸில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகியவை தேர்தலில் எதிரொலித்துள்ளன. சைப்ரஸின் தெற்கே கிரேக்க மொழி பேசும் பகுதிகளுக்கும் துருக்கிய ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கிற்கும் இடையே அரை நூற்றாண்டு பழமையான பிளவை இந்த தேர்தல் எதிரொலிக்கிறது.

இதன்படி சைப்ரஸின் வடக்குப் பகுதியை 1974ஆம் ஆண்டு தொடக்கம் கிரேக்க ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து துருக்கியப் படைகள் ஆக்கிரமித்து வருகின்றன.

Tags :