- வீடு›
- செய்திகள்›
- கொலம்பியாவின் புதிய அதிபராக முன்னாள் கொரில்லா படை உறுப்பினரான கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்றார்
கொலம்பியாவின் புதிய அதிபராக முன்னாள் கொரில்லா படை உறுப்பினரான கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்றார்
By: vaithegi Mon, 08 Aug 2022 09:42:38 AM
பொகட்டா: கொலம்பியாவில் புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூனில் நடந்தது. இதில், கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இடதுசாரி பிரிவு தலைவரான கஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றார். கன்சர்வேடிவ் கட்சியினர், பொருளாதாரத்தில் மித அளவிலான மாற்றங்களை கொண்டு வந்தபோதிலும், அது வாக்காளர்களை சென்றடையவில்லை.
மேலும் அதிகரித்து வரும் வறுமை, மனித உரிமை தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அது தேர்தலில் எதிரொலித்துள்ளது.
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற கஸ்டோ முறைப்படி நேற்று பதவியேற்று கொண்டார். போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கிளர்ச்சி குழுக்கள் ஆகியவை அரசுடன் மிக தீவிர மோதல்போக்கை கொண்டிருந்தன.
இதனால் நாடு உருக்குலைந்து போயுள்ளது. நாட்டில் அமைதியை கொண்டு வரவும், சமத்துவமின்மையை எதிர்த்து போராடுவேன் எனவும் கஸ்டோ உறுதி அளித்து உள்ளார். மேலும் புதிய அதிபரான கஸ்டாவோ பெட்ரோ எம்-19 என்ற கொரில்லா படையின் முன்னாள் உறுப்பினராவார் என்பது குறிப்பிடத்தக்கது.