Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விக்னேஸ்வரனுக்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்கிறார் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன்

விக்னேஸ்வரனுக்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்கிறார் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன்

By: Nagaraj Mon, 14 Sept 2020 08:33:16 AM

விக்னேஸ்வரனுக்கு நான் பக்கபலமாக இருப்பேன் என்கிறார் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன்

நான் பக்கபலமாக இருப்பேன்... எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை விக்னேஸ்வரன் உரக்கச் சொல்லி இருக்கின்றார். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” என வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது முன்னாள் டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உட்பட பல சமூக ஆர்வலர்களும் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவிலேயே டெனீஸ்வரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

respect,sideline,transparency,gurubaran,comment ,மதிப்பளிப்பேன், பக்கபலம், வெளிப்படை, குருபரன், கருத்து

அவரது பதிவின் விபரம் வருமாறு; எவருக்கும் தீங்கு விளைவிக்க வேண்டுமென்று நினைப்பவன் நான் அல்ல, அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டவனும் அல்ல. இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன்.

அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன். குருபரன் தங்களுடைய வெளிப்படையான கருத்துக்கு நிச்சயம் மதிப்பளிப்பேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :