Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:20:57 PM

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு விடப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளாராம்.
இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேக நபராக தம்மை பெயரிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

ex-president,summons,petition,annulment,in court ,முன்னாள் ஜனாதிபதி, அழைப்பாணை, மனுதாக்கல், ரத்து, நீதிமன்றில்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட்டு வரும் அக்டோபர் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியே அவர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags :