Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

By: Nagaraj Tue, 11 July 2023 09:17:45 AM

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

பஞ்சாப்: முன்னாள் முதல்வர் கைது... சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் துணை முன்னாள் முதல்வர் ஓ.பி.சோனியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 2016 முதல் 2022 வரை அமைச்சராக இருந்த சோனியின் வருமானம் ரூ.4.52 கோடியாக இருந்த நிலையில், ரூ. 12.48 கோடி செலவுக் கணக்கில் காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

arrest,last year,former chief minister,police ,கைது, கடந்தாண்டு, முன்னாள் முதல்வர், காவல்துறையினர்

மேலும், வருமானத்தைவிட 176.08 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்ந்ததாக அவர் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்றிரவு சோனியை கைது செய்துள்ளனர். கடந்தாண்டு முதல்வராக பகவந்த் மான் பதவியேற்ற பிறகு, இதுவரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் நான்கு முன்னாள் அமைச்சர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|