Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலி ரசீதுகள் கொடுத்து மோசடி... தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டம்

போலி ரசீதுகள் கொடுத்து மோசடி... தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டம்

By: Nagaraj Tue, 06 June 2023 2:39:26 PM

போலி ரசீதுகள் கொடுத்து மோசடி... தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம்: போலி ரசீது கொடுத்து மோசடி... கட்டிய பணத்திற்கு போலியான ரசீதுகள் வழங்கப்பட்டதாகக் கூறி மேட்டுப்பாளையம் தனியார் பைனான்ஸ் அலுவலகத்தில் பணம் செலுத்தியவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் கோவை சாலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்கு தவணை பணம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் பணம் செலுத்துமாறு வந்த போனை தொடர்ந்து அந்த அலுவலகம் சென்று முறையிட்டனர்.

counterfeit bill,fraud,inquiry,handling,complaint,protest ,போலி பில், மோசடி, விசாரணை, கையாடல், புகார், போராட்டம்

அவர்கள் பணம் கட்டியதற்கான பில்லை காட்டியபோது, அது போலியானது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பணம் வசூலித்த நிறுவன ஊழியர் அபிசேக் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் போலி பில் மூலம் நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

Tags :
|