Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ...சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்து சேவை ஏற்பாடு

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ...சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்து சேவை ஏற்பாடு

By: vaithegi Thu, 21 July 2022 4:36:56 PM

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ...சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்து சேவை ஏற்பாடு

சென்னை : 188 நாடுகள் பங்கேற்க இருக்கும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தாண்டு சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. மேலும், போட்டி நடைபெறுவதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தும் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போதைக்கு 90% வேலைப்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன.

bus,chess olympiad ,பேருந்து ,செஸ் ஒலிம்பியாட்

இந்த நிலையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகளை இயக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 25 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு 5 இலவச பேருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த இலவச பேருந்து சேவைகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து இந்த இலவச பேருந்துகள் அனைத்தும் சென்னை மத்திய கைலாஷில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பேருந்து ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு செல்லும் எனவும், இடையிடையே எஸ்.ஆர்.பி.ஸ்டூல்ஸ், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உள்ளிட்ட 19 இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடையும் வரைக்கும் இலவச பேருந்து சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|