- வீடு›
- செய்திகள்›
- விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... முதல்வர் அறிவிப்பு
விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... முதல்வர் அறிவிப்பு
By: Nagaraj Wed, 15 Nov 2023 4:06:17 PM
சென்னை: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... மறைந்த விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தகைசால் தமிழர் – முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.
மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.
மறைந்த விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.