Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லக்னோவில் உறைய வைக்கும் கடும் குளிர்... பள்ளிகள் நேரம் மாற்றம்

லக்னோவில் உறைய வைக்கும் கடும் குளிர்... பள்ளிகள் நேரம் மாற்றம்

By: Nagaraj Mon, 02 Jan 2023 9:23:07 PM

லக்னோவில் உறைய வைக்கும் கடும் குளிர்... பள்ளிகள் நேரம் மாற்றம்

லக்னோ: லக்னோவில் பள்ளிகள் கடும் குளிர் காரணமாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக லக்னோவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

இந்த நடைமுறை இன்று முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தின் அடிப்படைக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவில், மாணவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

lucknow,reduction,school time, ,குறைப்பு, பள்ளி நேரம், லக்னோ, வானிலை ஆய்வு

சீதாபூரில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக, 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் 4 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் உடனடியாக மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கோரக்பூரில் உள்ள எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வியாழக்கிழமை வரை கடும் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இமயமலையில் இருந்து வடமேற்கு காற்று வீசுவதால் அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :