Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி20 தலைமையை ஏற்ற இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் வாழ்த்து

ஜி20 தலைமையை ஏற்ற இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் வாழ்த்து

By: Nagaraj Tue, 06 Dec 2022 5:44:41 PM

ஜி20 தலைமையை ஏற்ற இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் வாழ்த்து

பிரான்ஸ்: இந்தியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்... ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா தற்போது ஏற்றுள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரதமர் மோடி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்

இந்த மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் தலைமை தாங்கி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக ஜி20 மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

2023 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அரசு தற்போதே தயாராகி வருகிறது. ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கருத்து தெரிவித்துள்ளார்.

biden,france,g20,modi,president of france,congratulations ,இந்திய அரசு, ஜி20 மாநாடு, பிரான்ஸ் அதிபர், வாழ்த்துக்கள்

அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருத்துடன் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன்மூலம் அமைதியான, நிலையான உலகத்தை பிரதமர் மோடி ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் மோடியை எங்கள் நண்பன் என குறிப்பிட்டு ஜி20 தலைமை ஏற்பிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|
|