- வீடு›
- செய்திகள்›
- வருகிற 14ம் தேதி முதல் 15ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மழை பெய்யக்கூடும்
வருகிற 14ம் தேதி முதல் 15ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மழை பெய்யக்கூடும்
By: vaithegi Sun, 12 Mar 2023 6:12:39 PM
சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதால் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக நிலவி கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிக்கை ஒன்றை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து இதில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு திசை மாறுபாடு காரணமாக வருகிற 14-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அத்துடன் வருகிற 16ம் தேதி அன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குறைந்தபட்சமாக 23-24 டிகிரி முதல் அதிகபட்சமாக 33-34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிக்கையில் இடம்பெறவில்லை.