Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்

இன்று முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 26 Sept 2022 2:53:17 PM

இன்று முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  மழை பெய்யக்கூடும்

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

rainy,tamil nadu,puduvai,karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்

மேலும் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சியால் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வருகிற 29,30 ஆகிய நாட்களில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதை ஒட்டிய குமரிக்கடல்‌ பகுதிகள்‌, இலங்கைக்கு தெற்கே உள்ள தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 60 கிலோ மீட்டர்‌ வேகம் வரையிலும் வீசக்கூடும்‌ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|