Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் மே 28-ம் தேதி வரை 3 நாள்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்

இன்று முதல் மே 28-ம் தேதி வரை 3 நாள்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Fri, 26 May 2023 1:48:59 PM

இன்று  முதல் மே 28-ம் தேதி வரை 3 நாள்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்


சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வருகிற 28-ம் தேதி வரை இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோன்று சில இடங்களில் மே 29-ம் தேதி இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியிருக்கும்.

chennai,rain ,சென்னை ,மழை

மேலும் தமிழகத்தில் மே 25-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணிக்குப் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் மாவட்டம் க.பரமத்தியில் 5 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 4 செ.மீ., சேலம் மாவட்டம் வீரகனூரில் 3 செ.மீ., தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 2 செ.மீ., நீலகிரி மாவட்டம் உதகை, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சேலம், வேலூர் காட்பாடியில் தலா 1 செ.மீ. மழை பதிவா உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, வரும் 28-ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :