இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்
By: Nagaraj Mon, 02 Jan 2023 10:47:36 PM
கொழும்பு: நாட்டில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 405 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்: மட்டக்களப்பு மண்மனை வடக்கு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட சவுக்கடி பகுதியில் சட்டவிரோதமாக அரச காணிகளை சில நபர்கள் கையகப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் பிரதேச செயலகமும் முற்றுகையிடப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று பின்னர் அங்கிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை கோசங்களை எழுப்பியவாறு சென்று காணி அபகரிப்பு தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன் போது காணி அபகரிப்புக்கு எதிராக உரிய தீர்வினை தற்போதைய வழங்க வேண்டும் என கோரி பிரதேச செயலாளருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் குறித்த இடத்தில் இருந்து செயலகத்திற்குள் சென்றார். இந்த நிலையில் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் இவ்விடத்தை விட்டு செல்ல மாட்டோம் என பிரதேச செயலகம் முன்பாக இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.