Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு... நாடாளுமன்றம் இந்த வாரம் 3 நாள் மட்டும் செயல்படும்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு... நாடாளுமன்றம் இந்த வாரம் 3 நாள் மட்டும் செயல்படும்

By: vaithegi Mon, 04 July 2022 08:56:25 AM

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு... நாடாளுமன்றம் இந்த வாரம் 3 நாள் மட்டும் செயல்படும்

கொழும்பு: வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் இலங்கை மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.

அதனை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவசியம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்களை இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் பல்வேறு எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது.

parliament,fuel ,நாடாளுமன்றம் ,எரிபொருள்

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையால், இலங்கை நாடாளுமன்றத்தின் அலுவல் நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாரம், 3 நாட்கள் மட்டும் நாடாளுமன்றம் செயல்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் வருகிற 6-ந் தேதி, அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம், விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது. அதே நாளில், தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இடையே, ஆகஸ்டு மாதம்வரை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை ரூ.885 கோடி செலுத்த வேண்டி இருப்பதாக இலங்கை மின்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா அவர்கள் தெரிவித்தார்

Tags :