Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழப்பத்திற்கு முழு உருவம் ஓ.பி.எஸ்.: எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

குழப்பத்திற்கு முழு உருவம் ஓ.பி.எஸ்.: எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

By: Nagaraj Sat, 21 Jan 2023 10:52:21 PM

குழப்பத்திற்கு முழு உருவம் ஓ.பி.எஸ்.: எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடும் தாக்கு

சென்னை: குழப்பத்திற்கு முழு உருவம், சிக்கலுக்கு எடுத்துக்காட்டு முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். அவர், ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார். மறுபுறம் பாஜகாவுக்கு ஆதரவு என்றும் கூறுகிறார் என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணம் பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது.இதில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். திருமண நாளில் 50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, திருமங்கலம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதன்பின், கட்சி நிர்வாகிகளுக்கு திருமண பத்திரிக்கை வைக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, “புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மகத்தான வெற்றி பெறுவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது” என்றார்.

bjp,mla,ops,rajan chellappa , எம்.எல்.ஏ, ஓபிஎஸ்., குழப்பம், முழு உருவம், ராஜன் செல்லப்பா

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜன் செல்லப்பா, “குழப்பத்திற்கு முழு உருவம், சிக்கலுக்கு எடுத்துக்காட்டு முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். அவர், ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார், மறுபுறம் பாஜகாவுக்கு ஆதரவு என்றும் கூறுகிறார். சுயேட்சையாக நிற்போம் என்கிறார். கிட்டி கண்ணன் பொய்யும் பொருட்டும் எட்டு நாள் என்ற பழமொழி போல அவரது பேச்சு உள்ளது. அதிமுக வெற்றிக்கு கலங்கம் விளைவிப்பதற்கான வழியை தேடுகிறார் ஓபிஎஸ்.” என்றார்.

தொடர்ந்து பேசிய ராஜன் செல்லப்பா, இரட்டை இலை கிடைக்கும் என நம்புகிறோம். இரட்டை இலை அ.தி.மு.க.வுக்கு சொந்தமானது அதுவே எங்களின் அங்கீகாரம். சுப்ரீம் கோர்ட்டில் இருந்து தீர்ப்பு வந்தால் நாளை கூட போட்டியிட தயாராக உள்ளோம். எடப்பாடி அணியில் இருப்பவர்கள் அனைவரும் எம்ஜிஆர், அம்மாவின் தொண்டர்கள். சட்ட திட்டங்களின்படி கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவிற்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இன்றைய சூழலில் அதிமுக எதிர்பார்ப்பது ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு. இரண்டாவது தேர்தல் ஆணையத்திடம் கிடைக்க வேண்டிய அங்கீகாரம்.” என்றார்.

Tags :
|
|
|