Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாலை விபத்தில் இறந்த செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

சாலை விபத்தில் இறந்த செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

By: Nagaraj Thu, 24 Aug 2023 6:44:01 PM

சாலை விபத்தில் இறந்த செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

திருநெல்வேலி: குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு... சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர் பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

general relief,financial notice,cinematographer,family,accident ,பொது நிவாரணம், நிதி அறிவிப்பு, ஒளிப்பதிவாளர், குடும்பம், விபத்து

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

Tags :
|