ராஜஸ்தானில் மாணவர்களுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு
By: vaithegi Sat, 07 Jan 2023 9:22:45 PM
ராஜஸ்தான் : விடுமுறை மேலும் நீட்டிப்பு .... நாட்டில் பனிக்காலம் தொடங்கியதால் பலநகரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. எனவே அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 7-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடுமையான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் சில நாட்களுக்கு டெல்லி NCR Region, உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 14-ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் பள்ளிகள் ஜனவரி 16-ம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.