Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்வு

By: vaithegi Fri, 14 Oct 2022 7:34:21 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும்  உயர்வு

மேட்டூர் : நீர்வரத்து மேலும் உயர்வு .... மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியுள்ளது. சேலம், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாகவே படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் நேற்று முன்தினம் அதிகாலை மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பிய நிலையில் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
எனினும் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்ந்து கொண்டே வருகிறது.

water supply,mettur dam ,நீர்வரத்து ,மேட்டூர் அணை

இதையடுத்து இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags :