Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுடில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் அஞ்சலி

புதுடில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் அஞ்சலி

By: Nagaraj Mon, 11 Sept 2023 06:45:15 AM

புதுடில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் அஞ்சலி

புதுடில்லி: ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி... டில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் அனைவரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

mahatma gandhi,g20 nations,anjali,leaders,new delhi ,மகாத்மா காந்தி, ஜி.20 நாடுகள், அஞ்சலி, தலைவர்கள், புதுடில்லி

முன்னதாக, நினைவிடத்துக்கு வருகை தந்த உலகத் தலைவா்களை குஜராத்திலுள்ள காந்தியின் சபா்மதி ஆசிரமத்தின் புகைப்படம் அச்சிடப்பட்ட சால்வையை அணிவித்து பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா். அப்போது, காந்தி ஆசிரமத்தின் சிறப்புகளையும் அவா்களுக்கு பிரதமா் எடுத்துரைத்தாா்.

பின்னா், இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘அமைதி, சேவை, இரக்கம், அகிம்சையின் கலங்கரைவிளக்கமாகத் திகழ்ந்த மகாத்மா காந்திக்கு ஜி20 குடும்பம் அஞ்சலி செலுத்துகிறது. மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத சித்தாந்தங்கள், வளமான உலகளாவிய எதிா்காலத்துக்கான நமது கூட்டு லட்சியத்துக்கு வழிகாட்டுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Tags :
|