Advertisement

கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க ஜி7 தலைவர்கள் முடிவு

By: Nagaraj Sun, 26 Feb 2023 9:26:30 PM

கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க ஜி7 தலைவர்கள் முடிவு

டோக்கியோ ; ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 தலைவர்கள் முடிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஓராண்டு நெருங்கும் நிலையில் உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.45,487 கோடி) நிதி உதவி வழங்கப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் பேசிய அவர், “ரஷ்ய படையெடுப்பால் உக்ரைன் இன்னும் தவித்து வருகிறது. ரஷ்ய தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உள்கட்டமைப்புகளை மீட்டெடுக்க உதவ வேண்டும். எனவே, உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர்களை ஜப்பான் வழங்குகிறது.

financial,tokyo,ukraine,zelensky, ,ஜி7, டாலர், தலைவர், ரஷ்யா

கடந்த 24ம் தேதி உக்ரைன் அதிபர் “ஜெலென்ஸ்கி பங்கேற்று, ஜி ‘7 மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளேன்,” என்றார். உக்ரைனில் போர் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ‘ஜி7’ நாடுகளின் தலைவர்களின் கூட்டம் ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இதில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், ‘ஜி7’ நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்தனர். ரஷ்யா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்பட வேண்டும்.

Tags :
|