Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜகவின் கட்டளைப்படி மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார் - ரந்தீப் சுர்ஜேவாலா

பாஜகவின் கட்டளைப்படி மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார் - ரந்தீப் சுர்ஜேவாலா

By: Karunakaran Tue, 08 Sept 2020 1:30:28 PM

பாஜகவின் கட்டளைப்படி மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார் - ரந்தீப் சுர்ஜேவாலா

சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறினார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் நடிகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. மேலும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக கங்கனா ரணாவத் பாலிவுட் நடிகர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்தார்.

பாலிவுட் நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கங்கனா ரணாவத் தெரிவித்து வந்தார். இதனால் தனக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கங்கனா ரணாவத் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

gangana,maharashtra,bjp,randeep surjewala ,கங்கனா, மகாராஷ்டிரா, பாஜக, ரன்தீப் சுர்ஜேவாலா

இந்நிலையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீருடன் ஒப்பிட்டது சரியல்ல. நியாய உணர்வுள்ள யாராலும் ஏற்க முடியாது. சினிமா நடிகைகள் மூலமாக ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கூற வைக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், பா.ஜனதாவின் கட்டளைப்படி, மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார். பா.ஜனதாவின் செயல்திட்டப்படி, எங்களை பகிரங்கமாக விமர்சிக்கிறார். அவர் மோடி மற்றும் பா.ஜனதாவின் செயல்திட்டத்தை பின்பற்றினாலும், அவரது பாதுகாப்பை சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதி செய்யும். அவரது விமர்சிக்கும் உரிமையை பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|