Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு... பாகிஸ்தான் மக்கள் அவதி

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு... பாகிஸ்தான் மக்கள் அவதி

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:15:25 PM

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு... பாகிஸ்தான் மக்கள் அவதி

இஸ்லாமாபாத்: விலை கிடுகிடுவென உயர்வு... பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் அங்குள்ள பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல மாதங்களாக கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தற்போது லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

crisis,economy,fuels,pakistan,petrol, ,எரிபொருட்கள், நெருக்கடி, பாகிஸ்தான், பெட்ரோல், பொருளாதாரம்

லாகூரில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் 70 மூடப்பட்டுள்ளது என்றும் மற்ற பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் விற்பனை செய்யப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளது.

எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை முறையாக விநியோகம் செய்வதில்லை என்று பாகிஸ்தான் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதனை மறுக்கும் எண்ணெய் நிறுவனங்கள், சிலர் எரிபொருளை பதுக்கி வைத்து செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்க முயற்சிப்பதாகக் கூறினர்.

Tags :
|
|
|