Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை நடக்கிறது பொதுக்குழு... ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

நாளை நடக்கிறது பொதுக்குழு... ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

By: Nagaraj Sun, 10 July 2022 8:55:05 PM

நாளை நடக்கிறது பொதுக்குழு... ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

சென்னை: தீவிர ஆலோசனை... அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கிற்கு நாளை (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

அதேவேளையில், நாளை காலை 9.30 மணிக்கு பொதுக்குழுவும் கூட்டப்பட இருக்கிறது. நாளை காலை சென்னை உயர் நீதிமன்றம் வழங்க இருக்கும் தீர்ப்பின். அடிப்படையிலேயே, அதிமுக பொதுக்குழு நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்பது தெரிய வரும். இருப்பினும், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் உள்பட ஓபிஎஸ்ஸின் கட்சி பதவிகள் பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஏதேனும் நடைபெறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தயாராக இருக்கிறார்.

next step,action,consultation,supporters,aiadmk ,அடுத்த கட்டம், நடவடிக்கை, ஆலோசனை, ஆதரவாளர்கள், அதிமுக

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு தனித்தனியாக தங்களுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


நாளை (ஜூலை 11) பொதுக்குழு நடைபெற இருக்கும் நிலையில், அதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவரான ஈபிஎஸ், சென்னையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள், பணிகள் குறித்து கேட்டறிந்தார்.


அதுபோல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ்ஸும் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அவர், நாளை (ஜூலை 11) வர இருக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

Tags :
|