பொதுத்தேர்வு வினாத்தாள் தயார் .. அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்
By: vaithegi Mon, 06 Mar 2023 6:49:00 PM
சென்னை : தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து 11 -ஆம் வகுப்பிற்கு மார்ச் 14 -ஆம் தேதி தேர்வு தொடங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அதனை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
எனவே அதன்படி தற்போது நாமக்கல் மாவட்டத்தில் 11 மற்றும் 12- ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த வினாத்தாள் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள வினாத்தாள் பாதுகாப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். மேலும் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.