Advertisement

பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

By: vaithegi Sun, 12 Mar 2023 07:30:51 AM

பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை .... தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச்சில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறுவது வழக்கம். இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.

இதனை அடுத்து பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி பிளஸ்-2 மாணவர்களுக்கு மார்ச் 13 நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழக்கப்படும்.

general examination time table ,பொதுத்தேர்வு ,கால அட்டவணை


தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.

மேலும் எந்த காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது. தவிர, விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் போன்றவற்றை குறிப்பிடக்கூடாது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Tags :