ஜார்ஜியாவின் ஆளும் கட்சி ரஷ்யாவுக்கான ஆதரவை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு
By: Nagaraj Mon, 10 Apr 2023 10:53:12 AM
அட்லாண்டா: ஜார்ஜியாவின் ஆளும் கட்சி ரஷ்யாவுக்கான ஆதரவை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் சாகாஷ்விலி. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அரசியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மைக்கேல் தனது அமெரிக்க வழக்கறிஞர் உதவியுடன் சில விஷயங்களை வெளியிட்டுள்ளார். அதில், ஜார்ஜியாவின் ஆளும் கட்சி ரஷ்யாவுக்கான ஆதரவை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் ஜார்ஜிய சிறையில் இறந்து கொண்டிருக்கிறார். தனது நிலைமைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அவர் குற்றம் சாட்டினார். சிறையில் அவர் திட்டமிட்ட உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். என் உடலில் அதிக உலோக விஷம் இருந்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறேன். இவை அனைத்தும் சிறைவாசத்திற்குப் பிறகு வந்தவை.
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2008 இல், மைக்கேல் ஜார்ஜியாவின் அதிபராக இருந்தபோது, அந்த நாடு ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டது. போரைத் தொடங்கியதற்காக மைக்கேலை தூக்கிலிடப் போவதாக ரஷ்ய அதிபர் புடின் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைக்கேல், தற்போது தனது இந்த நிலைமைக்கு நிச்சயம் புதினே பொறுப்பு ஆவார் என கூறியுள்ளார். ரஷிய உளவாளிகள் ஜார்ஜியன் பாதுகாப்பு சேவைக்குள் ஊடுருவி தனக்கு விஷம் வைத்து விட்டனர் என்றும் கூறியுள்ளார். சரியான மருத்துவ உதவி இன்றி விரைவில் இறந்து விடுவேன் என அலறியுள்ள அவர், அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து, ஜார்ஜிய அரசுக்கு தூதரக அளவிலான நெருக்கடி கொடுத்து தனது உயிரை பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.