Advertisement

என் மனைவியை மீட்டு தாருங்கள்... கணவர் போலீசில் புகார்

By: Nagaraj Sat, 01 Oct 2022 10:56:02 AM

என் மனைவியை மீட்டு தாருங்கள்... கணவர் போலீசில் புகார்

நெல்லை: காதல் மனைவியை அவரது பெற்றோர் பிரித்து அழைத்து சென்று விட்டனர். எனவே எனது மனைவியுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரகாஷ் (25). தொழிற்கல்வி படித்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வள்ளியூர் அருகே வள்ளியம்மாள் புரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் திவ்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இருவரும் கடந்த ஐந்து வருட காலமாக காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பிரகாஷ் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது விபத்து ஏற்பட்டு அவரது இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டன. இரு கால்களும் செயலிழந்த நிலையில் தொடர்ந்து திவ்யாவும், பிரகாஷூம் காதலித்து வந்துள்ளனர்.

police,investigation,love wife,parents,complaint ,போலீசார், விசாரணை, காதல் மனைவி, பெற்றோர், புகார்

இந்நிலையில் பிரகாஷ்க்கு விபத்து ஏற்பட்டு கால்கள் செயல் இழந்து விட்டதால் திவ்யாவின் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை அறிந்த திவ்யாவின் பெற்றோர் தனது மகளை பிரகாஷ் கடத்தி சென்றதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இருவரும் பிரகாஷின் வீட்டில் வைத்து அவரது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை கேள்விப்பட்ட திவ்யாவின் பெற்றோர் பிரகாஷின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.. பிரகாஷை சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி திவ்யாவை இழுத்துச் சென்றுள்ளனர்.. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரகாஷ் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Tags :
|