Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரிபுராவில் துர்கா பூஜையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் பரிசு தொகுப்பு

திரிபுராவில் துர்கா பூஜையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் பரிசு தொகுப்பு

By: vaithegi Tue, 10 Oct 2023 12:41:07 PM

திரிபுராவில் துர்கா பூஜையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் பரிசு தொகுப்பு


திரிபுரா : திரிபுரா மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டு காரர்களுக்கும் துர்கா பூஜையை முன்னிட்டு சிறப்பு மானிய விலையில் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டு உள்ளது. இத்திட்டத்தை திரிபுரா உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சுஷாந்த சவுத்ரி நேற்று அறிவித்திருந்தார். இத்திட்டத்தினை முதல்வர் மாணிக் சாஹா இன்று தொடங்கி வைக்கிறார்.

எனவே அரசின் அறிவிப்பின்படி ரேஷன் கடைகளில் வழங்கும் பரிசுத் தொகுப்பில் 1 லிட்டர் கடுகு எண்ணெய் ரூபாய் 113 க்கும், 2 கிலோ மாவு, அரை கிலோ ரவா, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் 128 ரூபாய்க்கு கடுகு எண்ணெய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

gift package,tripura,durga puja ,பரிசு தொகுப்பு ,திரிபுரா, துர்கா பூஜை

இதனை அடுத்து ப்பரிசு தொகுப்பினை மக்கும் கேன்வாஸ் பைகளின் மூலம் வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும், திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான 3.58 லட்சம் பைகள் தற்போது வந்து இருப்பதாகவும், மொத்தம் 9 லட்சம் பேருக்கு இந்த திட்டம் சென்றடைய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் உணவு மற்றும் சிவில் சப்ளை துறையின் கீழ் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் இதர பணிகளில் ஈடுபட்டு உள்ள 635 தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டில் கருணைத் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :