Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சிறுமிகள்

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சிறுமிகள்

By: Karunakaran Mon, 07 Dec 2020 7:52:02 PM

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சிறுமிகள்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று காலை வழக்கம்போல இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

அதன்பின், எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதலும் நடத்தாமல் அந்த 2 சிறுமிகளையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அப்பாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த லைபா சபீர், சனா சபீர் என்பது தெரியவந்தது.

pakistan,occupied kashmir,indian territory,inadvertently ,இந்திய எல்லை,ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான், ஒப்படைப்பு

மேலும், அந்த இரண்டு சிறுமிகளும் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. அதன்பின், அந்த இரண்டு சிறுமிகளுக்கும் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த இந்திய படையினர் சிறுமிகளை பாகிஸ்தான் தரப்பிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் தவறுதலாக வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த லைபா சபீர் மற்றும் சனா சபீர் இரண்டு சிறுமிகளையும் இந்திய பாதுகாப்பு படையினர் இன்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷங்கன் டா பாக் பகுதியில் உள்ள இருநாட்டு எல்லைக்கட்டுப்பாடு பகுதி வழியாக லைபா சபீர் மற்றும் சனா சபீர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags :