உலக அளவில் கொரோனா பெருந்தொற்றின் நிலவரம்
By: vaithegi Thu, 20 Apr 2023 09:59:41 AM
வாஷிங்டன்: சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதன்பின், கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மிக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் முதலில் ஊரடங்கை அமல்படுத்தின. அதன்பின்பு, தடுப்பூசி கண்டறியப்பட்டு, மக்களுக்கு அவற்றை செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றன. இதன்பின் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், உருமாற்றமடைந்த வைரசானது தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 4 லட்சத்து 87 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 65 கோடியே 86 லட்சத்து 18 ஆயிரத்து 160 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 68 லட்சத்து 44 ஆயிரத்து 514 பேர் உயிரிழந்துள்ளனர்.