உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.08 கோடியாக உயர்வு
By: vaithegi Wed, 10 Aug 2022 07:14:02 AM
சீனா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59.08 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 56.27 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 58,223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .ஒரே நாளில் மட்டும் தொற்று பாதிப்பால் 342 பேர் உயிரிழந்துள்ளனர்.